ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்கினால் ஆதரவு! -சாமர சம்பத்

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்குவேன் என ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்குவேன். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். ஏனையவர்களின் தீர்மானம் தொடர்பில் என்னால் எதையும் கூறமுடியாது.
உரிய நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

எனவே ஏனையவர்களைப்போன்று மன்னதாகவே ஆடைகளை தைத்து பதவிபிரமானத்திற்கு தயாராகப்போவதில்லை தேர்தலில் எமக்கு எவரும் சாவாலாக அமையப்போவதில்லை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கட்சி ரீதியாக நாம் தீர்மானம் எதனையும் இதுவரை மேற்கொள்ள வில்லை. ஆனால் நான் தனிப்பட்ட ரீதியில் ரணிலுக்கே ஆதரவு வழங்குவேன்” இவ்வாறு சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.