வர்த்தக நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உரகஸ்மன்ஹந்திய மீகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து பலத்த காயங்களுடன் இரத்தம் கசிந்த நிலையில் இன்று காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்த நிலைய உரிமையாளரின் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.