வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் காயம்

முக்கிய செய்திகள் 1

வவுனியா, மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடுப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (14) மாலை வவுனியா, மாமடு - கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர் பயணித்த போது வீதியில் இருந்த யானை ஒன்று குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

பின்னர் அவ்வீதியால் சென்றோர் தாக்குதலுக்குள்ளான நபரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மாமடு - கள்ளிக்குளம் வீதியில் உள்ள பல காணிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ள போதும், அவ்வீடுகளில் பலரும் குடியிருக்காமையால் அப் பகுதி பற்றை காடுகளாக மாறியுள்ளதுடன், காட்டிலிருந்து வரும் யானைகள் அப் பற்றை காடுகளின் ஊடாக வீதிக்கு வருகை தந்து அப் பகுதியில் நடமாடித் திரிவதுடன் வீதியில் செல்வோரைத் தாக்க முயற்சிப்பதாகவும் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.