புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 700 சுற்றிவளைப்புகள்!

முக்கிய செய்திகள் 1

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின்போது சட்டத்தின் கீழ் சிக்கிய நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்துள்ளார்.

பொருட்கள் வாங்கும் போது நுகர்வோர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் குறித்தும் சோதனை நடவடிக்கையின்போது அவர் தெளிவுபடுத்தினார்.