பயணிகளின் வசதி கருதி மேலதிக பேருந்துகள் இணைப்பு!

முக்கிய செய்திகள் 2

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக இன்று அதிகமான பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் 9,000 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முதல் ரயில் சேவைகளும் வழமை போல் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.