வறட்சியால் 11, 413 பேர் பாதிப்பு!

முக்கிய செய்திகள் 2

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 3, 646 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், வறட்சியான காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 949 பேரும், பதுளை மாவட்டத்தில் 190 பேரும், பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.