40 நாட்களாக ஆரஞ்சு பழச்சாறு மட்டும் குடித்த பெண்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், 40 நாட்களாக பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த 'மோமோ டயட்' தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

A post shared by Anne Osborne (@fruitisbeaut)