24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சபுகஸ்கந்த உப மின் உற்பத்தி நிலையத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர்விநியோம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8.30 மணி முதல், இரவு 8.30 மணி வரை நீர்விநியோம் தடைப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க - சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கடான, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளுக்கு நீர்விநியோம் தடைப்படவுள்ளது.