களனி ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

முக்கிய செய்திகள் 1

பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் களனி ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சாம்பர் நிற சட்டையும் பச்சை மற்றும் மஞ்சள் நிற வேட்டியும் அணிந்துள்ள நிலையில் உயிரிழந்தவரது முகம் அழுகி இருப்பதால் அவரை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.