மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள தேசிய மக்கள் சக்தி – அநுரவிடம் கூறிய சீன அமைச்சர்

முக்கிய செய்திகள் 3

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநிதியும் அமைச்சருமான ஷன் ஹயன் தலைமையிலான குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

இதன் போது தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்திணைக்களத்தின் பிரதி அமைச்சர் ஷன் ஹய்ன் தலைமையிலான குழுவினர் அநுர குமாரவிடம் தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷன் ஹய்ன், சீன கம்யூனிஸ கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லின்தோ, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் கவுன்ஸிலர் சென் சியன்ஜியான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களித்தின் பணிப்பாளர் லி ஜின்யன், பிரதி பணிப்பாளர் வென் ஜின், பிரதி அமைச்சின் செயலாளர் ஜின் வன், கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் இரண்டாம் செயலர் ஜின் என்ஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாங் குயு ஆகியோர் கலந்துகொண்டனர்.