கபில விக்ரமநாயக்கவின் பிணை கோரிக்கை ஒத்திவைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒளடத விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தாம் விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக அவர் நீதிப் பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன், குறித்த நீதிப் பேராணை மனுவின் இடையீட்டு கோரிக்கையாக தமக்கு பிணை வழங்குமாறும் ஒளடத விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க கோரியிருந்தார்.

குறித்த இடையீட்டு கோரிக்கை மீதான தீர்ப்பு இன்று மேன்முறையீட்டு நீதியரசர் என்.சமரகோனினால் அறிவிக்கப்படவிருந்தது.

எனினும் தமது தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிப்பதாக நீதியரசர் இன்று மன்றில் தெரிவித்துள்ளார்.