ஆஸியிலிருந்து இலங்கை வரவிருந்த விமானத்தின் பொருட்கள் பகுதிக்குள் நுழைய முயன்றவர் கைது!

முக்கிய செய்திகள் 3

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வரவிருந்த விமானத்தின் பொருட்கள் பகுதிக்குள் நுழைய முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய நபராவார்.

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற குறித்த நபர், விமானத்தின் பொருட்கள் வைக்கும் (சரக்கு பகுதி) பகுதிக்குள் நுழைய முயன்றபோதே அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சிட்னி சர்வதேச விமான நிலையத்துக்குள் இவர் நுழைவதற்கு 12 மாதங்களுக்கு தடைவிதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.