குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

முக்கிய செய்திகள் 2

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட குழுவை கூடிய விரைவில் சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக கடமைகளும் பாதிக்கப்படுவதாக அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஏனைய குழுக்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு விரைவான தீர்வை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.