மாமுனை கடற்பகுதியில் இருவர் கடற்படையினரால் கைது!

முக்கிய செய்திகள் 1

சட்டவிரோதமாக கணவாய் மீனை பிடிப்பதற்க்காக இலைகுழைகளை படகில் ஏற்றிச்சென்ற இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர் .