ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு – வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முக்கிய செய்திகள் 1

கம்பஹா ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இராணுவப் பிரிகேடியர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கம்பஹா மேல் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான நீருக்காகப் போராட்டம் நடத்திய பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை கொலை செய்து மேலும் பலரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இராணுவப் பிரிகேடியர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது