தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறை; ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்!

முக்கிய செய்திகள் 3

தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வல்லுநர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு உரிய நடைமுறைகளை விரைவில் மேற்கொள்வது அவசியமானது என சங்கத்தின் தலைவர் எச்.ஆர்.பி.உதயசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதனால் உடனடியாக பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.