மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

முக்கிய செய்திகள் 1

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெல்லாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்தனர்.பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிக்கபொதயிலிருந்து வெல்லாவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் தம்பதெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.