பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டும் ராணுவம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கல்முனையில் பெண்ணொருவர் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கேணல் தனிக பதிரட்ன,கட்டளை அதிகாரி மேஜர் களுஆராச்சி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அமலதாசன் கிராம உத்தியோகத்தர் சுந்தரராஜன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டிருந்தனர்.