மீண்டும் இலகு ரயில் போக்குவரத்து திட்டம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரான JICA ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை நாடு வரவேற்கிறது.

கொழும்பில் இதே மாநாட்டில் உரையாற்றிய ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, தற்போதுள்ள யென் கடன் திட்டங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தை தெரிவித்தார்.

ஜூலை 2023 இல், இலங்கையின் அமைச்சரவையானது, முன்மொழியப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் பற்றிய விவாதங்களை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான காலவரையறையை முடிவு செய்ய பச்சைக்கொடி காட்டியது.

கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டதுடன், தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.