சேவையிலிருந்து விலக்கப்பட்ட 9,000 இராணுவத்தினர்

முக்கிய செய்திகள் 2

விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ அதிகாரிகள் உட்பட பல தரப்பினருக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி பொதுமன்னிப்புக் காலத்தில் 9,770 இராணுவத்தினர் இவ்வாறு விலக்கப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.