நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

முக்கிய செய்திகள் 2

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் நாளையும் நாளை மறுதினமும் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.