திருகோணமலை கல்லறாவு கரைவலை செய்யும் இடங்களை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்

முக்கிய செய்திகள் 2

திருகோணமலை கல்லறாவு கரைவலை செய்யும் இடங்களை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் பார்வையிட்டார்.

அங்கு கடலையும், களப்பையும் இணைக்கும் இயற்கையான முகத்துவாரப் பகுதியை 2011ஆண்டில் அருகில் உள்ள தனியார் காணி உரிமையாளர் மண் மூடைகள் போட்டு தடுத்துவிட்டதால் களப்பில் இயற்கையாக உருவாகும் மீன் , இறால், மட்டி போன்றவை இப்போது குறைந்து அல்லது இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.