தமிழ் பொது வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து என்று தெரிவிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்கள் வெல்லப்பட வேண்டியவர்களே தவிர, மீண்டும் மீண்டும் அவர்கள் தோற்கடிக்கப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) திருகோணமலை மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடிய வேளையே மேற்கொண்ட கருத்தினை அவர் தெரிவித்தார்.
மேலும் சமகால அரசியல் நிலவரம் மற்றும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈபிடிபி கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.