மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு !

முக்கிய செய்திகள் 1

மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயதுடைய சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

கடந்த 4 ஆம் திகதி காலை, நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இந்த சிறுவன் பங்கேற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது . போட்டியில் பங்கேற்ற பின் வீட்டிற்குத் திரும்பிய சிறுவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துள்ளார் .

சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் . பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகச் சிறுவன் உயிரிழந்ததாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர் .