இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்.. டோனியை விமர்சித்த ஹர்பஜன் சிங்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

தர்மசாலா:06

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தம்முடைய கெரியரிலேயே முதல் முறையாக 9-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

இந்நிலையில் 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒருவேளை 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் டோனி விளையாடக் கூடாது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் டோனியை போல் ஷாட்டுகளை அடித்ததில்லை. எனவே டோனி ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

அவருடைய அனுமதியின்றி சி.எஸ்.கே. அணியில் எதுவும் நடக்காது. எனவே டோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்டபோது கடந்த போட்டிகளில் அசத்திய டோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று (அதாவது நேற்று) சி.எஸ்.கே. வெற்றி பெற்றாலும் நான் டோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்.

என்று ஹர்பஜன் கூறினார்.