லாப் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, ஓக 16

லாப் எரிவாயு தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.

3 ஆயிரத்து 120 மெட்ரிக்டொன் லாப் எரிவாயு இவ்வாறு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் சிலிண்டர்கள் நிரப்பட்டவுடன், விரைவாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.