அரசுக்கெதிராக கொழும்பில் நாளை போராட்டம்: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, ஓக. 17: ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாளை கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஓன்றியம் தெரிவித்துள்ளது.

அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுவித்தல், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுதல், பல்கலைக்கழக கல்வியை மீள ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.