போராட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, நடிகர் செஹான் அப்புஹாமி உள்ளிட்ட ஆறு பேர் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.