இந்திய எல்லையில் இரு சோதனைச் சாவடிகள்

இந்தியச் செய்திகள் செய்திகள்

இந்தியா தமது அயல் நாடுகளான மியன்மார் மற்றும் பங்களாதேஷ் எல்லைப் பிராந்தியங்களில் இரண்டு எல்லை சோதனை சாவடிகளை அமைத்துள்ளது.

இந்தியாவுக்குள் வரும் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் பிரஜைகள் இந்த சோதனை சாவடியில் பரிசோதிக்கப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதுடன், பரிசோதனை சாவடிகள் அமையும் இடங்கள் குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது. உரிய கடவுச்சீட்டின் மூலம் இந்த சோதனை சாவடியின் ஊடாக பரஸ்பரம் பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.