மியன்மார் மீது பொருளாதாரத் தடை

உலகச் செய்திகள் செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தொடர்பில் மியன்மார் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் ரொக்கின் பிராந்தியத்தில் வாழும் ரோஹின்கியா முஸ்லிம் மக்கள் மிகவும் துன்பத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மியன்மாருடனான இராணுவ பயிற்சியை நிறுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.