சூறாவளிக்கு முன் ஆயத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அந்தமான் தீவுகளுக்கு அருகில் சூறாவளி அனர்த்தம் ஏற்படும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் அப்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதும் கடற்றொழிலாளர்கள் குறித்த அறிவுறுத்தலை கவனத்தில் எடுக்காமல் இருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

சூறாவளி தாக்கம் ஏற்படுமிடத்து கடலில்படகுகளில் இருப்போருக்கு ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுவதால் பாதுகாப்பு கருதி கடற்றொழிலாளர்கள் அந்தமான் தீவுகளுக்கு சென்று பாதுகாப்பாக இருப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதுவராலயம் ஊடாக அணுகி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.