நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு புதிய பிரதி தலைவர் நியமனம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் நேற்று (24) தனது பதவியை இராஜினாமா செய்தபின்னர், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு அவர் நியமிக்கப்பட்டு, இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று கையொப்பமிட்டார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களை இழிவுபடுத்தி முகநூலில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் பதவிகளை நேற்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.