ஹெரோயினுடன் ஒருவர் கைது

செய்திகள்

மொரட்டுவ, கட்டுபொத்த பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து 19.450 கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை இன்று (27) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.