ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவுரை கூறினார் மனோ கணேசன்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

உரியவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மொனராகலை, படல்கும்புரயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மனோ கணேசன், இந்த அரசாங்கம் திருடர்களை பிடித்தது. கடந்த அரசாங்கமோ திருடர்களை உருவாக்கியது. இந்தநிலையில் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செய்ய தகுதியானவர்களுக்கு உரிய பதவிகளை வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.