புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும்: கல்வி அமைச்சு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊவா மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.