புத்தாண்டு காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்ப்பதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆபத்தான இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.