போலி 5,000 ரூபா நோட்டுக்களைக் கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த நபர்!

முக்கிய செய்திகள் 2

ஒரே இலக்கம் கொண்ட நான்கு போலி 5,000 ரூபா நோட்டுக்களைக் கண்டெடுத்த ஒருவர் அதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடங்கொட புஹபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற சூதாட்ட மைதானத்தில் வைத்து இந்தப் பணத்தைக் கண்டெடுத்ததாகக் கூறி தம்மிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி நாணயத்தாள்களை ஒப்படைத்த நபர் தமக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இவற்றை வைத்திருந்தவரை அடையாளம் காண்பதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.