முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு தடை உத்தரவு நீடிப்பு!

முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது

அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.