ஒன்றிணையும் Dialog – Airtel : ஒப்பந்தம் கைச்சாத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 1

டயலொக் ஆக்ஸியாட்டா (Dialog Axiata), பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க இது தொடர்பான குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் இன்று (18) கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், டயலொக் ஆக்ஸியாட்டா, பார்தி ஏர்டெல்லுக்கு 10.4% பங்குகளை வழங்குவதன் மூலம் Airtel Lankaவின் 100% பங்குகளை கையகப்படுத்தும்.

இரு நிறுவனங்களுக்கிடையிலான பங்கு இடமாற்றம் ஒரு சுயாதீன அமைப்பால் மதிப்பிடப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.