கால்வாய் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களனிகம தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இன்று (21) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 5 அடி4 அங்குலம்‌ உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நீல நிற சட்டையும் செம்மஞ்சள் நிற வேட்டியும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பண்டாரகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.