வேனால் மோதப்பட்டு 21 வயது இளைஞர் பலி

முக்கிய செய்திகள் 1

மதுரங்குளி நகரத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த வேனொன்றில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மதுரங்குளி , முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞராவார்.

இவர் நேற்று (24) குளிர்பானம் பருகுவதற்காக மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மதுரங்குளி நகரத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.