இலங்கைக் கிரிக்கெட் அணி தொடர்பில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை

செய்திகள் விளையாட்டு

இலங்கை அணியை புதிய பாதைக்கு இட்டுச்செல்வது குறித்து இடம்பெற்ற மாநாட்டில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முதல் பேச்சுவார்த்தை நேற்று விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

குறித்த அறிக்கையை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, அரவிந்த டி சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.