பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையின் கீழ் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் அமைச்சர் பைஸருக்கு எதிராக எதிர்வரும் 02 நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அந்தக் கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது தொடர்பாகவே அதற்கு பொறுப்பான அமைச்சரான பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதால், குறித்த யோசனையை முன்வைப்பதற்கு ஏனைய அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.