மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டால் வைத்திய அத்தியட்சகரே பொறுப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஏதாவது வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எந்த வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் பயன்படுத்தி அருகில் உள்ள வைத்தியசாலை மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.