யாழில் ஒருவர் அடித்துக் கொலை; சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன் மற்றும் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,

கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏனைய இரு மகன்களை பொலிஸாhர் தேடி வருகின்றார்கள்.

யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் (வயது 38) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் போது, ஆலய வளாகத்திற்குள் உள்ள பூசகர் ஒருவரும் அவரின் மூத்த மகனும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தனது கணவரை கடத்திச் சென்றவர்கள் யார் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி பொலஸாருக்கு அடையாளம் காண்பித்ததைத் தொடர்ந்து, பூசகர் மற்றும் அவரது மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். பூசகரின் ஏனைய இரு மகன்களையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருவதுடன், கைது செய்த இருவரையும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.