கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு அனுமதி

செய்திகள் விளையாட்டு

புதிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அனுமதியளித்துள்ளார்.

கிரகம் லெப்ரோயின் தலைமையிலான ஐவர் அடங்கிய இந்தக் குழுவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதியளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் அசங்க குருசிங்க, காமினி விக்ரமசிங்க, ஜெரி வவ்டர்ஸ் மற்றும் சஜித் பிரணாந்து ஆகியோர் உறுப்பினர்களாகவுள்ளனர். இந்தக் குழுவே எதிர்வரும் பாகிஸ்தானுடனான தொடருக்கான இலங்கை அணியை தேர்வு செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.