ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று காலை ஏ-9 பிரதான வீதியை மறித்து கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கிளிநொச்சியில் போனவர்களின் உறவினர்கள் இன்று 67ஆவது நாளாக தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியது.

இதனிடையே, இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.